முதல் முதலாய் என் தந்தைக்கு ஒரு கவிதை

நான் தளர்ந்து நிற்கும் வேளையில் எனக்கு தோல் கொடுத்த தோழன் அவன்
நான் துணிந்து நிற்கும் வேளையில் என்னுடன் நிற்கும் என் தன்னம்பிக்கை அவன்
நான் யோசனையில் முழுகிதும் வேளையில் என் பினால் நிற்கும் பொதி மரம் அவன்
நான் தவறுகள் செய்கையில் என்னை திருத்திட என் முன் நிற்கும் ஆசான் அவன்
தன்னை உறுக்கி என்னை படைத்த பிரமன் அவன்
வருடங்கள் பல கடந்தும் என்னை அவனுடன் சுமந்து செல்லும் தாய் அவன்
சொல்லி முடிக்க இயலாத கவிதை அவன்
தொழுது முடிக்க இயலாத தெய்வம் அவன்
என்னை உருவாகிய உயிரன்னு அவன்
அவன் உழைப்பில் என்னை உயர்த்திய உழைப்பாளி அவன்
அவன் அனுபவத்தை முன் நிறுத்தி என்னை வழிநடத்தும் என் தலைவன் அவன்
அவன் அவன் என்று சொல்லி கவி எழுதிதும் பொழுதும் அதை ரசித்து நிற்கும் என் ரசிகன் அவன்

முதல் முதலாய் என் தந்தைக்கு ஒரு கவிதை

எழுதியவர் : அரவிந்த்.ச (9-May-16, 12:49 pm)
பார்வை : 1248

மேலே