இந்தியா பாக்கிஸ்தான்

இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் போட்டி உலகமே யார் வெற்றி கொள்வார் என பரபரப்பாக பார்த்துக் கொண்டிருந்தது

அப்போது இந்நியர்கள் கடவுளே இந்தியா வெற்றி பெற்றிட வேண்டுமென வேண்டினர்

பாக்கிஸ்தான் மக்கள் கடவுளே பாக்கிஸ்தானை எப்படியாவது வெற்றி கொள்ளச் செய்து விடு என கடவுளிடம் வேண்டினர்

கடவுள் இந்த இரு மக்களும் இந்திய மக்கள் இந்தியா ஜெயிக்க வேண்டுமென்றும் ,பாக்கிஸ்தான் மக்கள் பாக்கிஸ்தான் ஜெயிக்க வேண்டும் எனவும்

இந்த இரு மக்களும் என்னையே வேண்டுகின்றனரே, இதில் யாருடைய வேண்டுதலை நான் நிறை வேற்றுவேன் என்று தெரியாமல் குழப்பத்தி்ல் கடவுளே ஆழ்ந்து போனார்

கடைசி ஓவர், இந்தியா பந்து வீச பாக்கிஸ்தான் ஆறு பந்துகளில் பதினெட்டு ரன்கள் எடுக்க வேண்டும் ,

ஐந்து பந்துகள் முடிந்தது ,பாக்கிஸ்தான் ஐந்து பந்துகளில் பதினான்கு ரன்கள் எடுத்திருந்தது

கடைசி பந்து நான்கு ரன்கள் எடுக்க வேண்டும் ,பவுளர் பந்தை கையில் எடுத்து ஓடி வர ,பேட்ஸ் பேட்டை கையில் இறுக்கி பிடிக்க ,பெருத்த இடி ,மின்னல் ,சூறைக்காற்றுடன் பெரும் மழை
யார் யார் எங்கெங்கே நிற்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை
ஆட்டம் ரத்தானது




கடவுள் இப்போது இந்தியா பக்கமும் இல்லை,பாக்கிஸ்தான் பக்கமும் இல்லை
மனிதரிடையே சமநிலையை காத்து விட்டார்









-விக்னேஷ்

எழுதியவர் : விக்னேஷ் (11-May-16, 3:45 pm)
Tanglish : indiaa pakkisthaan
பார்வை : 327

மேலே