இதில் நான் யார்-முஹம்மத் ஸர்பான்

உலகில் அவனை பார்
இவனை பார் என்ற
கோஷங்கள் ஏராளம்..,
அதைக் கேட்டுக் கேட்டு
நானும் மனநோயாளியாகின்றேன்.

பல கண்களில் அழகாய்
தோன்றும் ரோஜாக்கள் தோட்டம்
சிலரின் போதிமர நிழலில்
முட்களின் தோட்டமாய் தெரிகிறது.

கடலின் பேரலைகளின்
இரைச்சலும் என் காதில்
கொசுவின் ஓசை போல் கேட்கிறது..,
தினந்தினம் வருகை
தருகின்ற கதிரவனும் மேற்கில் உதித்து
கிழக்கில் மறைந்தால் என்னவாகும்.

கல்லறை தோட்டத்தில்
சடலங்களின் வித்துக்கள்
மண்புழுவின் ஆராய்ச்சியில்
விசாரணை செய்யப்படுகின்றது..,
பணம் என்ற தீயசக்தி மட்டும்
மண்ணில் இல்லாவிட்டால் மனிதனும்
மனிதனாய் வாழ்ந்திருப்பான் என நம்புகிறேன்.

நான் தனிமையை விரும்பும்
மனநோயாளி என்று பலரும்,
நரைத்தும் ஒற்றைக் காசு உழைக்க
துப்பில்லாதவன் என்று சிலரும்,
நீ ஒரு முட்டாள் கவிஞனென்று
என் மனசாட்சியும் என்னிடம்
விவாதம் செய்தனர்..,இதில் நான் யார்?

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (3-Jun-16, 7:52 am)
பார்வை : 152

மேலே