ஒரு வானவில் பாட்டு
வாடிய முல்லைக்கு
--------வாட்டம் போக்கினான் வள்ளல் பாரி !
தேடிய தென்றலுக்கு
--------வாடா மலர்த் தோட்டம் வரவேற்பு நல்கியது !
தேடி அலைகிறேன்
---------தினம் தினம் வீதிகளில் நீ கிடைக்க வில்லை !
பாடித் திரிகிறேன்
---------ஒரு வானவில் பாட்டு நீ வருவாய் என்று !
----கவின் சாரலன்