நெஞ்சத்தைக் கிள்ளுறாளே

என் நெஞ்சுக்குள்ளே ஆசை வைச்சேன்...
அவள் கண்ணுக்குள்ளே என்னை தொலைச்சேன்...
கிட்ட நெருங்காமலே இதயத்தை திருடுறாளே...
வலியேதும் இல்லாமலே என்னைக் கொள்ளுறாளே......
அவளைப் பார்க்கும் போது நான்
மெழுகாய் உருகிப் போறேன்...
அவள் பார்வைப் பட்டாலேப் போதும்
பல ஜென்மம் வாழ்வேன் நானும்......
என் நெஞ்சுக்குள்ளே......
மலர்களை வருடும் தென்றலாய்
விழிகளால் நெஞ்சைத் தீண்டுகிறாள்...
வான வில்லாய் பூமியில் தோன்றி
வந்துப் போன சில நொடிகளில்
வான் மதியாய் எனைத் தேய வைக்கிறாள்......
மின்னொளிக்கு ஏங்கும் தாழம் பூவாய்
அவளின் நினைவு உள்ளூர
நித்தம் எனை ஏங்கச் செய்கிறாள்......
முகிலின் மழைத் துளியாய்
ஊதக் காற்றில் பனித் துளியாய்
இள நெஞ்சிலே தூழிக் கட்டி
உயிருக்குள்ளே ஊசல் ஆடுகிறாளே......
என் நெஞ்சுக்குள்ளே......
அதிகாலை நேரங்களில் அவளைக் காணாது
விடியல் என்பது எனக்கு கிடையாது...
அந்தி சாயும் பொழுதில் அவளின்றி
எந்தன் வானம் அழகு பெறாது......
இதழில் உதிரும் வார்த்தைகளால்
என் செவிகளில் தேனை ஊற்றுகிறாள்...
கனவிலே வந்தாலும் கண்ணெதிரே வந்தாலும்
வெள்ளை சிரிப்பால் கொள்ளைச் செய்கிறாள்......
கடல் தாண்டி வந்தப் பறவையாய்
கானல் நீர் தரும் காட்சியாய்
கண்களின் வழியே நுழைந்து
சிலையென நின்று இதயத்தையே ஆள்கிறாளே......
என் நெஞ்சுக்குள்ளே......