ஆண் என்னும் சிருங்காரம்

ஆண்டவன் படைப்பில் பெண் ஒரு அதிசயமெனில்
ஆண் ஒரு அவசியம்..

அழகைச்சொல்லும் ஆவணம் பெண் என்றால்
அதை இனம் காட்டும் சாதனம் தான் ஆண்..

இளம் பிராயத்தின் வளர்ச்சியில் மலராய் மணப்பது, பெண் எனில்
அதன் வனப்பாய் திகழ்வது ஆண்..

இருந்தும் ஆண் அழத் தெரியாதவன் அல்ல..
கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன்..
அன்பில்லாதவன் அல்ல..
அன்பை மனதில் வைத்து சொல்லில் வைக்கத் தெரியாதவன்..

சிரிக்கத் தெரியாதவன் அல்ல..
நேசிப்பவர்களின்முன் குழந்தையாய் மாறுபவன்..
காதலைத் தேடுபவன் அல்ல..
ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையைத் தேடுபவன்..
கரடுமுரடானவன் அல்ல..
நடிக்கத் தெரியாமல் கோபத்தைக் கொட்டி விட்டு வருந்துபவன்..

அத்தகு ஆண் மாசற்ற இளைஞனாய் வலம் வருகையில்
கண்ணுக்குள் கவர்ந்திருக்கும் ஓவியம்,
கண்கவர் நல்ல நடவடிக்கைகளினால் கலக்கப்போகும் காவியம்
காரியச்சித்தியில் வாலிபத்தை சீர் செதுக்கி உயரவேண்டிய அவசியம்..

பெண்ணியத்தை போற்றுவோம், அதே சமயம்
ஆணியத்தையும் சீரமைத்து காப்போம்..

எழுதியவர் : செல்வமணி (5-Jun-16, 12:07 pm)
பார்வை : 90

மேலே