அம்மாவும்

ஆயிரம் அழுத்தங்கள்
இருந்தாலும் எங்கோ
இருந்து வந்த ஒருவன் எனை
துரத்த முனைந்தான்
எனை சுற்றி இருந்த அரண்களை
உடைதெறிந்தான்
தோல்விதான் அவனுக்கும்
அம்மாவை ஆழமாய் இறுக்க பற்றிக் கொண்டேன் ....
தாய் தந்த இடத்தை விட்டு நான்
எங்கே போவேன் ?
ஒரு மூலையில் அம்மாவுக்கும்
புரியாமல் தெரியாமல்
அவள் உள்ளே அனாயாசமாய்
அமர்ந்து சிறிது வளர்ந்தும் விட்டேன் ....
எனக்கு....
சிந்திக்க சிரசு
பார்வைக்கு கண்கள்
அம்மாவையும் உணர முடிந்ததது .....
ஆனால்
அம்மாவால் ஏனோ எனை
ஆரம்பத்தில் இருந்து உணரமுடியவில்லை....
ஒருமுறை என்னை பறி சிந்திக்க கூட முடிவில்லை
அவளின் அலுவலக பழு அவளுக்கு....

இன்றோடு தொனூறு நாட்கள் ..
அவள் சுவாசத்தை நான் பகிர்ந்து ...
எதோ உறைக்க
தந்தையை அழைத்து வேகமாய்
போனாள்....

வழமைக்கு மாறன இடம்
அது......
அலுவலகம் அல்ல
ஆறேழு தாய்கள் தளர்ந்து
காத்திருந்தனர்
அம்மாவும் காத்திருந்தாள்
எதற்கு
எனக்கு புரியவில்லை
குழாய் ஒன்று
என் இருப்பை படம் பிடித்து காட்ட
அம்மா கலங்ககிவிட்டள்...
இருப்பை கழுவ முனைந்தும்
கருப்பையுள் இருக்கிறதா என
மகத்தான மருத்துவ ஆலோசனை வேறு
இருப்பை அழிக்க முனைந்ததால்
நான் நலமாக இருப்பேனா என தெரியாது என்று...
அமைவின் அடிவயிறு கலங்க...
பட திரையில் என் அசைவுகளை பார்த்து அசையாது நின்றாள்


அம்மா நான் நலமாக இருக்கிறேன் என
அலற எனக்கு வாய் என்னும் வளரவில்லை
என் செய்வேன் ????
தாயும் என்னை உணரும் நிலையில் இல்லை

எனக்கு நாள் குறித்தாகிவிட்டது
அம்மாவிடம் இருந்து நான் போகவேண்டிய
நாள் .....
எனை தொலைக்க அவள் படவேண்டிய கடினம் வெறு
பாவம் ....
அவள் நிலை அப்படி .....
ஆனால் அம்மா
மீண்டும் இப்படி ஒரு தவறை செய்யாதே ..........

எழுதியவர் : (9-Jun-16, 10:22 am)
Tanglish : ammavum
பார்வை : 95

மேலே