உன்னைச் சரணடைந்தேன்

உன்னைச் சரணடைந்தேன்....

மல்லிகையில் சரம் தாெடுத்தேன்
மன்மதனின் மனம் பறித்தேன்
மன்னனவன் புன்னகையில்
உள்ளமதை நான் தாெலைத்தேன்......

கண்ணனவன் பூங்குழலில்
கானமதை நான் ரசித்தேன்
கள்ளனவன் காலடியில்
என் இதயம் நான் காெடுத்தேன்......

வீரனவன் அன்பினில் தான்
உலகமதை நான் மறந்தேன்
காதல் எனும் மந்திரத்தால்
உன்னையே சரணடைந்தேன்.........!

எழுதியவர் : அன்புடன் சகி (26-Jul-16, 8:19 pm)
பார்வை : 253

மேலே