முயற்சி
மீண்டும் அந்த விரல்கள் எழுதுகிறது
விக்ரமாதித்தன் போலவே மீண்டும் எழுகிறது
எத்தனையோ கேள்விகள் அத்தனைக்கும் பதில்கள்
வேதாளம் ஒன்றும் விரும்பியதாக தெரியவில்லை
வேதனைதர மீண்டும் ஏறியது முருங்கை மரம்
விடுமா அந்த விரல்கள் போதுமென்று
மீண்டும் ஒரு கவிதையை எழுதுகிறது
குப்பைத் தொட்டியில் வீசும் அந்த விரல்களுக்கு