உன் உதட்டருகே என் உதடு காத்திருக்குதடி 555
என்னவளே...
நீயும் நானும் அருகருகே
அமர்ந்து பேசும் நேரங்களில்...
உனக்கே தெரியாமல் நான்
உன் கண்ணமருகே வருவேனடி...
எதிர்பாராமல் நீ
திரும்பும்வேளை...
நம் நாசிகள் மோதிக்கொள்ளும்
அதற்காகவே நெருங்குவேனடி...
உன் உதட்டருகே நான்
காத்திருக்கும்வேளை...
உன்னை அறியாமல்
வெளிப்படும் எச்சில்...
என் முகத்தில் சாரல்
மழையாக வருமே என்றுதாண்டி...
உன் நெஞ்சருகே நான்
தலை சாய்க்கும்போது...
என் செவிகளுக்கு மட்டுமல்ல
தேன்பாயும் சங்கீதம் உடல் முழுக்க...
என் ஆசைகள் எல்லாம் உன்னிலே
தொடக்கி உன்னிலே முடிகிறதடி...
இன்று என் ஆசை காதலியே...
நாளை நீதானடி
என் அன்பு மனைவி.....