மசக்கை

ஊரு முழுக்க என் பேரு சொல்ல
உறவு வருதுன்னு தெரிஞ்சுகிட்டேன்..
உயிருக்குள் உயிரை வைச்சு
அடிக்கடி
உன்னை தொட்டு பார்த்துக்கிட்டேன்..
புத்தகம் பல படிச்சிருக்கேன்..
பகவத்கீதையையும் கரைச்சு குடிச்சுருக்கேன்..
மாசம் மாசம் நீ வளர
மந்திரமும் சொல்லி இருக்கேன்..
குழந்தை நீயும் வரும் வரை
மாறும் ஹார்மோனில் தவம் இருக்கேன்..
சின்ன சிட்டே நீயும் வந்து
சிரிச்சுகிட்டே பாடுவாயோ..
அகிலம் மறக்க என்னை கட்டி...
மழலை பேச்சு இசையினிலே
அம்மா என்ற ஸ்வரம் மீட்டி...

எழுதியவர் : தீபாகுமரேசன் (16-Aug-16, 5:18 pm)
பார்வை : 356

மேலே