நா முத்துக்குமார்

கவிஞனே.....
எழுத்துக்கள்
உன் வசப்பட்டது...!

கற்பனையை நீ
களவாடினாய்.....!!

தமிழ் உன்னிடம்
தலை அசைத்தது...!!!

கவிதைகள் உன்
காலடி தொட்டது....!!

புகழ்
உன் வசப்பட்டது....!

நீயோ
காலன் வசப்பட்டாய்
ஏனோ............?

எழுதியவர் : ஆ. க. முருகன் (18-Aug-16, 11:23 pm)
பார்வை : 240

மேலே