மனதைமயக்கும்……
மனதைமயக்கும்……
15 / 06 / 2025
கோப்பையை கையினில் ஏந்தினால் - என்
கோலமும் மாறியே தடுமாறும்.
போதையும் மூளைக்குள் ஏறினால் - என்
பாதையும் பாம்பாய் வளைந்தாடும்.
கோதையுன் நினைவுகள் மீறினால் - அந்த
போதையும் சொர்க்கமாய் சுகமளிக்கும்.
பேதை உன் ஸ்பரிசங்கள் கூடினால் - அங்கு
காதையும் கவிதையும் ஊற்றெடுக்கும்.
மெத்தையில் கொடியென புரண்டுவிட்டால் - எந்த
மேதையையும் பித்தனாக்கி அலையவிடும்.
இளநுங்கு இதழ்களை சுவைத்துவிட்டால் - அத்தனை
மதுவகையும் போதைதனை இழந்துவிடும்.
தங்கம்தனை குழம்பாக்கி கூட்டிவிட்டால் - உன்
அங்கமாய் சிலைபோல ஜொலித்துவிடும்.
அங்கங்கள் மேல் கைகள் மேய்ந்துவிட்டால் - என்
அங்கங்கள் சூடாகி வெடித்துவிடும்.
மதுவும் மாதுவும் சேர்ந்துவிட்டால் - அங்கு
எதுவும் இசையாகி மனதைமயக்கும்.