வருவாயா என் வாழ்க்கை துனையாக

உன் ஆசைகள் அனைத்தையும்
என் நேசத்தால் நிறைவு செய்வேன்

உன் உள் உணர்வுகளைக்கூட
என் காதலால் அறிந்திடுவேன்

என் உதிரத்தில் கலந்தவள் நீ
உன் நிழலாகவும் நானிருப்பேன்

நீ என்னுடன் வாழும் காலம்வரை
பாசத்தை மட்டுமே நான் கொடுப்பேன்

கேள்விக்குறிகள் ஏதுமின்றி
உனக்கு என் உயிரையும் கொடுத்திடுவேன்

மரணம் வந்தால் கூட
என் காதலை நினைவுகளாக்கி
உனக்கு பரிசலிப்பேன்

வருவாயா என் வாழ்க்கை துனையாக

எழுதியவர் : கிருபாகரன் (26-Aug-16, 8:15 am)
பார்வை : 526

புதிய படைப்புகள்

மேலே