மானிடா யோசி-கங்கைமணி

மானிடா! யோசி!?
இயற்கையின் கோபம் பொல்லாது யோசி!
இருப்போர் இல்லாதார் பாராது யோசி!
வானம் வீசிய (நீர்)வலையில் சிக்கித்தவிப்பது-
நீனா? மீனா? மீண்டும் யோசி!
வெள்ளம் புரண்டு வீதியில் வருதே!
விரக்தியில் விழிகள் கலங்கி நிற்குதே! ஏன் என யோசி!
ஆதி மனிதன் ஆக்கியதெல்லாம் அற்ப்பமா?
அறிவு கற்ற நாம் அழித்தது மட்டும் சிறக்குமா?
இயற்க்கை அழிவு இடுகாடு நமக்கு!
இருள் போர்வை எடுத்து போர்த்தாதே அதற்க்கு!
அண்டைவீட்டை அபகரித்தாலே ஆத்திரம் பிறக்கும்,
ஐந்து பூதமும் உனக்கென்ன அடங்கியா கிடக்கும்?
இனியும் மாறு இயற்கையோடு சேரு !
எடுத்ததைத்திருப்பி கொடுத்திடப்பாரு!
குளமும், குட்டையும் இயற்கையின் படைப்பு!
குன்றும் ஆறும் அதுகண்ட சிறப்பு!
இயற்க்கை கொடுத்த வாய்ப்புதான் வாழ்வு!
இன்முகத்தோடு ஏற்ப்பதே இயல்பு.
-கங்கைமணி