பூலோகம் சொர்கம் ஆவது எப்போது

உண்மையே நீ எங்கே போய்

ஒளிந்துக்கொண்டாயோ/

தெரியவில்லையா, நான்

பொய்யைத் தேடி போகின்றேன்

என்றது திருடனைத் தேடும்

போலீஸ் போலே.உண்மை



ஒளியே நீ எங்கே ஓடுகிறாய்

என்றால் நான் என் கருத்த தங்கை

இருளைத் தேடி என்றது ,

இருளே இல்லாமல் போய்விட்டதோ

என்று தோன்றிற்று



ஆதவனைக் கேட்டேன்

எங்கே நீ போகின்றாய் என்று ,

நிழலைத்தேடி என்றான்

நிழலும் வாராமல் போனதேனோ

தெரியவில்லையே


ஒன்றில்லாமல் மற்றோன்று

தோன்றுவது ஏது, இவ்வுலகில்

அவ்வாறு தோன்றின்

இவ்வுலுகம் பூலோகம் இல்லாது

சுவர்க்கம் ஆயிடுமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Aug-16, 9:13 pm)
பார்வை : 155

மேலே