என் பிள்ளை எங்கே சிரிக்க மட்டும்

புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட ரோபோட் காரின் மகிமையை மனைவிக்கு எடுத்து சொன்ன கணவன்... இங்க பாரு இனி நீ மூக்கால முனங்க தேவல்ல... உனக்கு என்ன வேல செய்யணுமோ இந்த கார் கிட்ட சொன்ன போதும் 10 நிமிடத்தில வேல நடக்கும் என்றான். மனைவி கணவனின் திறமையை பரிசோதிக்க,
அற்புத காரே! எனக்கு கூடை நிறைய பழம் வாங்கி வா என்றதும் கார் புறப்பட்டு 10 நிமிடத்தில் நாட்டில் உள்ள எல்லா விதமான பழங்களையும் வாங்கி வந்தது.
சந்தோஷமடைந்த மனைவி கணவனிடம், ஏங்க நம்ம பசங்க பாடசாலைல இருந்து கூட்டிட்டு வர சொல்லுங்களே என்றாள்,
அற்புத காரே! நீ சென்று என் பிள்ளைகளை கூட்டிட்டு வா என்கிறார். கார் புறப்பட்டு 1 மணி நேரத்தில் மீண்டும் வந்தது. என்ன அதிசயம் கார் முழுவதும் கியோ மியோ என்று 40 குழந்தைகளை கண்டதும் மனைவி கோபத்தில் உங்களுக்கு இவளோ பிள்ளைகளா என்றாள்?
சிறிது நேரம் வாயடைத்து கணவன் மனைவியை பார்த்து .................................................................................... என்றான், மனைவி வாயடைத்து நின்றாள்...
கணவன் என்ன கேட்டிருப்பான்? நண்பர்களே உங்கள் கற்பனையை கொஞ்சம் சொல்லுங்கள்.

எழுதியவர் : மாஹிரா (1-Sep-16, 10:37 am)
பார்வை : 545

மேலே