எழுத்து சுரந்தது

கருவிலே இருக்கும்போது பார்க்கும்போதெல்லாம்
கரும் மை உணர்த்தியது எழுத்து சுரக்கும்மென்று!
மறந்து இருந்தேன் தொழில் பக்தியால்

குழந்தை பிறந்தது பால் சுரக்கவில்லை
தாயாக முழுமைபெற சுரக்கும்மென்று
தவித்துயிருந்தேன் என் மனைவிபோல்

நிறைந்து இருந்த தொட்டிலை வற்றி
கையிலே ஏந்தினேன் குழைந்தை
பொழுதிலே சிறந்ததை உணர்த்தது மனது
இதுவும் கடந்து போகும் என உணர்த்தியது அறிவு
காதலையும் மிஞ்சியது எனது முதல் பார்வை
குழந்தையின் விழியும் குறுகுறுத்தது
முழுமைப்பெற்றேன் தந்தையாக
எழுத்தும் சுரந்தது!

எழுதியவர் : krish (3-Sep-16, 8:41 pm)
சேர்த்தது : sgkrish
பார்வை : 87

மேலே