புத்தகமே புதுக்கவிதைப் புன்னகையே

சித்திரமே செவ்விதழ் புத்தகமே
மெல்ல இதழ் திறந்திடுவாய்
புத்தகமே புதுக்கவிதைப் புன்னகையே
மெல்லத் இதழ் திறந்திடுவாய்
தத்துவச் சித்தனும் தடுமாறும் செவ்வாய் ஏடே
மெல்ல இதழ் திறந்திடுவாய்
சத்தமில்லா சாகசம் செய்யும் சாத்திரமே
மெல்ல இதழ் திறந்திடுவாய்
வித்தகியே விந்தைத் தேனிதழே
மெல்லப் பொழிந்திடுவாய் நான் பருகிடவே !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Sep-16, 9:33 am)
பார்வை : 184

மேலே