விழி நீரின் வழி தேடல்

கானல் நீர்
கடைசி வரி
கண்ணாடி மாளிகை
கற்பனை உலகம்
இனிக்கும் கண்ணீர்
மனம் கமழும் காகிதப்பூ
காலனின் கருணை
துர்கையின் அன்பு
துரோகியின் காதல்
கண்களின் வியர்வை
கருவிழியின் ரத்தம்
கருநிற உதிரம்
காரிருளின் வெளிச்சம்
உண்மையின் வீழ்ச்சி
முடிந்த நிமிடம்
உதிர்ந்த இலை
செழிக்கும் பாலை
சிற்பத்தின் கனவு
அனைத்தும் இணைத்து
அழகிய சோலை அமைத்து
மலரும் தருணம்
வசந்தத்தை முடித்துவிட்டாய்
வாழ்நாள் எடுத்து வசந்தத்தைக் கொடுத்துவிடு
வாழ்வு நிமிடம் எனினும் நிம்மதி அளித்துவிடு . . .

எழுதியவர் : (6-Sep-16, 4:57 pm)
சேர்த்தது : ராதிகா
பார்வை : 239

மேலே