தீது எனப்படுவதைக் கண்டால்

தீது எனப்படுவதைக் கண்டால்
சாட்டைக் கொண்டடி

தீது செய்ய எவரும் பிறப்பெடுக்கவில்லை
தீது செய்யாதோரே இவ்வுலகத்தில் இல்லை..
அப்படியே இருந்தாலும்
ஒன்று குழந்தையாக இருக்கணும்..
இல்லை புத்தி தெளிவின்றி இருக்கணும்..
தீதை வளரவிட்டதே தப்பு..
தீதுக்கும் அதிகமாக ஏறிவிட்டது தீய நினைப்பு..
அதற்கு தேவை அன்பெனும் அணைப்பு..
மாறாவிட்டால் ஒரு முறை சொல்லலாம்
இருமுறை சொல்லலாம்..
இல்லையெனில் எடுக்கலாம் சாட்டையை..
பிய்த்து எறியெலாம் தீதின் மேனியை..

தீது எனப்படுவதை கண்டால்
சாட்டைக் கொண்டடி..
ஓடட்டும் அதன் நெடி..
அடங்கட்டும் அந்த நொடி..
உன் உணர்வை அதன் மேல் வெடி
எழாமலே மடியட்டும் தீதுச் செடி..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Sep-16, 7:20 am)
பார்வை : 113

சிறந்த கவிதைகள்

மேலே