என்ன தவம் செய்தேனோ

என்ன தவம் செய்தேனோ
மானிடனாய் பிறப்பதற்கு..
மானிடனாய் வாழாவிட்டால்
மானிடற்க்கு இந்த பிறப்பெதற்கு..

மாறிடும் மனம் கொண்டார் மானிடர்
தருவர் பலருக்கும் தன் செயலால் பேரிடர்
ஆருடம் பார்த்திடுவர் அடுத்தவர் கெடுவதற்கு
யாரிடமும் சண்டையிடுவர் தன் சொல்லே ஜெயிப்பதற்கு

பேறு பெற்றோர் என்பதை சடுதியில் மறந்துவிட்டு
பெரும் கூச்சல் போட்டிடுவர் தன் பேரே கெட்டிட‌
வரும் பேரை அறியாது வம்பு பேசிடுவர்
தரும் சொல்லால் அவர் துடிக்க.. துளியும் திருந்தாதார்

தீயோரெல்லாம் மானிடரென்றால் எவரும் சிரித்திடுவர்
தீயோர்போல் பலராலே உலகெல்லாம் ஆர்ப்பாட்டம்
மானிடம் எனக்கூற நாக்கூட கூசுகிறது
ஐந்தறிவு சீவனெல்லாம் நமைப்பார்த்தே நகைக்கிறது

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Sep-16, 7:29 am)
பார்வை : 459

மேலே