அகம் பத்து --- ஒரு விகற்பக் குறள் வெண்பாக்கள்
அகம் பத்து --- ஒரு விகற்பக் குறள் வெண்பாக்கள்
மாதர் முகம்போல் மலர்ந்திடும் தாமரை
காதலைக் கூறும் களிப்பு .
மதியும் மகளிர் மனமு மறியாப்
பதியு மிருந்தென் பலன் .
அனிச்ச மலரி னகத்தின ளுள்ளம்
பனிமேல் பசலை படந்து .
மலர்முகப் புன்னகை மாய்க்கும் மனத்தாள்
பலர்காணா பாவையெழில் பார்த்து .
கண்ணழகில் காளையர் காதலால் வீழ்த்திடும்
வண்ணமிகு பெண்ணின் வனப்பு .
ஊடல் தவறில்லை உள்ளம் புணர்தலில்
கூடலும் சான்றோரின் கூற்று .
முத்தங்கள் தந்தவிடம் முள்ளாகிக் குத்திடவும்
பித்தனாகி நின்றேன் பிணக்கு .
மண்நோக்கும் காலை மதிமுகம் நோக்காக்கால்
கண்ணோக்கி வாழ்வதென் கண்டு .
நோக்கும்கண் பாராது நோயால் வயப்பட்டே
ஆக்குதலு மில்லை அகம்.
கடைக்கண் கனியவும் காமத்தின் நோயு
மிடைவிடா துன்ப மினி .
ஆக்கம் :-
கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்.

