நீ + நான் = காதல்
ஒற்றடம் தரும் பார்வையால்
உயிர் தடவி
குறும் புன்னகையால்
ஆயுள் நீட்டி
சொட்டுச் சொட்டாய்
தேநீர் வாழ்வை
தித்திக்கச் செய்கிறாய் - நீ
மனத்தின் பள்ளத்தாக்கில்
மழையென வந்து
இதயம் எங்கும் சில்லிடும்
உன் ஸ்பரிசத்தில்
நனைந்து கொண்டிருக்கிறேன் - நான்
உனக்குள் என்னையும்
எனக்குள் உன்னையும்
சேமித்து
காதலை செலவு செய்வோம்
வா!