விதவையின் காதல்
என்னவன்
சிதறிய மௌனத்தால்
என் வாழ்க்கை
சிறகடித்தான்....
என்னவன்
இன்றும் என்னை வர்ணிக்கிறான்
வெண்ணிற ஆடை உடுத்திய
வெண்ணிலா என்று ....
என்னவன்
அழகான காதல்
விதையை மனதில் விதைத்து
விதைவை என்ற புனித பட்டம்
பெற்று தந்த மகான்...
என்னவன்
காலன் அழைப்பான் என்று
தெரிந்தும் அவன் என்
உதிரத்தில் உயிரை
சேர்த்த பிரம்மா....
நீ
எனக்காக சொன்ன
பொய்யான கவியில்
மெய்யான கவி
இந்த விதவை...
வேறு எவருக்கும் தகுதியில்லை
என்னை மணக்க ....
மறுபிறவி எடுத்து வந்தாலும்
உனக்காக காத்திருப்பேன்
வெண்ணிற புறாவாக...
அன்று
அவன் உயிருக்கு வாழ்ந்தேன்...
இன்று
அவனுடைய உயிருக்காக
வாழ்கிறேன் வாழாமல்....
-ஜ.கு.பாலாஜி-