அது போதும் என்றாள்

போர் வாள்
என்றேன் பார்வையை
போய் வா என்றாள்
பூவாள்
என்றேன் புன்னகையை
மீண்டும் அதே சொன்னாள்
ஏவாள் என்றேன்
எழில் தேவதை என்றேன்
ரசிக்கவில்லை
யார் என்று சொல்வேன்
என்றேன்
மௌனமாய் பார்
அது போதும் என்றாள்
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Sep-16, 9:05 am)
பார்வை : 467

மேலே