எது விடுதலை

தியாக ரத்தங்கள் ஆறாய் ஓட்டி,
உடல் தசைகள் உரமாய் போட்டு,
அவங்களை மண்ணாய் சேர்த்து,
சுதந்திர பயிராய் பெற்ற விடுதலையா இது ?

பகிர்ந்துண்ட மக்களை- லஞ்சம் என்ற
போர்வையில் மக்களை சுரண்டுவதா விடுதலை ?
நியம் கொண்ட நெஞ்சங்களை - பழி என்ற
போர்வையில் தீயிட்டு எரிப்பதா விடுதலை ?

பாரதி கண்ட புதுமை பெண்களை - காதல் என்ற ,
போர்வையில் பலாத்காரம் பல புரிவதா விடுதலை ?
மனிதர்களை மனிதர்களே ஒதுக்கி -இறைச்சி என்ற,
போர்வையில் கசையடிகள் பல கொடுப்பதா விடுதலை ?

உணர்வு கொண்ட மனிதர்களை -மதம் என்ற
போர்வையில் கொலைகள் பல புரிவதா விடுதலை ?
ஓன்று பட்ட கூட்டத்தை - தீவிரவாதம் என்ற
போர்வையில் அழிவுகள் பல புரிவதா விடுதலை ?

காந்தி எதிர் பார்த்த விடுதையா இது ?-இல்லை
காமராஜர் எதிர் பார்த்த விடுதையா இது ?
நேரு எதிர் பார்த்த விடுதையா இது ?-இல்லை
நேதாஜி எதிர் பார்த்த விடுதையா இது ?

வன்முறை வெறியர்களாய் மாறி போய் இருக்கும் நாம் ,
உண்மையில் விடுதலை பெற்றோமா !!!???

எழுதியவர் : பெனிட்டோ (21-Sep-16, 4:08 pm)
சேர்த்தது : Benito
Tanglish : ethu viduthalai
பார்வை : 570

மேலே