பெண்பால் - படக்கவிதை

பெண்பாலென்றால்
கள்ளிப் பாலென்று
பெண்பாலே தந்தபோதும்
தடையெதிர்த்துத் தப்பி வந்த
பெண்பாலே...!

பிறக்கும்போதே
தடை தாண்டிப் பிறந்தவள்...!

இப்போதோ
தாயை இழந்த
கோழிக்குஞ்சு நீ...!

காமப் பருந்துகளின்
பார்வைக் கதிர்வீச்சுகளில்
இருந்து
தப்பிக்கத்தான் வேண்டும்...!

பெண்பாலின் ஏழ்பருவமும்
சமூகக் கடலின்
பேரலைத் தடைகளை
எதிர் கொண்டாக வேண்டும்...!

ஈனர்களை எதிர் கொள்ள
பிறக்கும்போதே
இனியாவது
பெண்பாலுக்குத் தரட்டும்
அக்னிச் சிறகுகளை..!.

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (25-Sep-16, 8:59 pm)
பார்வை : 562

மேலே