இலை விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

எட்டிலையில் ஆன விநாயகனை எண்ணியே
சட்டமாய் என்றும் துதிப்போர்க்கு - கிட்டுமே
எண்ணிய எண்ணமெலாம்; எண்ணுக நல்லன;
திண்ணமாய்ப் பற்றவன் தாள்! 1

இலைவிநாய கன்நமக்(கு) இல்லையென்று சொல்லான்
தலையாய உன்னத தர்மத் – தலைவனவன்;
அன்னவனை நன்றாய் அலங்கரித்து நாம்பாட
இன்னமுதம் தந்திடுவான் இன்று! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Sep-16, 8:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

மேலே