இசை விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்
இசைநல் விநாயகனை இன்றே வணங்க
வசையின்றி வாழலாம் நன்றே – நசைஇ
யிராதுதான் ஈத்துவந்(து) இன்பம் பெறுப
வரேல்வராது துன்பம் தமக்கு! 1
ஒன்றாகக் காட்சிதரும் ஐந்து விநாயகனை
நன்றே வணங்குங்கால் நல்லிசை - தன்னாலே
நாள்தோறும் வந்துசேரும்; அன்னவனை என்னாளும்
தாள்வணங்கு முன்னால் பணிந்து! 2