ஒற்றுப்பெயர்த்தல் - இருவிகற்ப நேரிசை வெண்பா

தாமரை பூத்திருக்கத் தண்ணீரில் தாவுகின்ற
பூமகள் மொட்டோடு புன்னகை - தூமணி
காலைக் கதிரவன் கண்டலர்ந்தா னின்பமுடன்
மாலை மயங்கும் மலர் .

பொருள் :-

தாமரை மலர் தண்ணீரில் பூத்திருக்கின்றது . தாமரை மலரின் மொட்டு தூமணியாய்ப் புன்னகையை வீசித் தாவிப் பிடிக்கின்றது பூமகளான தாமரை மலரை . இந்நிகழ்ச்சியைப் பார்த்தக் கதிரவன் கண் விழித்துக் காலையில் இன்பமாய் எழுந்தான் . மாலையில் கதிரவன் மறைவதைப் பார்த்தத் தாமரை மலரும் மயங்கி தலைசாய்த்து நிற்கின்றது என்று ஒரு பொருள் பாடவும் ,

தாவுகின்ற மான் ( தாமரை = தா + மரை ) தண்ணீர் இருக்கும் திசை நோக்கி தன் கூட்டத்துடன் தாகம் தீர்த்துக் கொள்ள தாமரைப்பூ பூத்திருக்கும் குளத்தை மணிகள் அணிந்த கழுத்தினை ஆட்டிக் கொண்டு தேடித் புன்னகையுடன் தாவிச் செல்லும் . மான் கூட்டத்தைப் பார்த்து நெற்கதிர்கள் ( கதிரவன் = கதிர் + அவன் ) அதிகாலையில் முளைவிட்டு அலர்ந்து இன்பத்தோடு மாலையில் மயங்கி தலை சாய்த்து நிற்கும் என்ற பொருள் பாடவும் ஒற்றுப் பெயர்க்கலாம் . ( ஒன்றை இன்னொன்றாகப் பெயர்த்தல் )

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Sep-16, 9:57 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 61

மேலே