மறந்துவிடுங்கள்

நல்லதைச் சொல்பவரை நகைத்திடும் உலகில்
பொய்பேசித் திரிவோரே
போற்றப்படுகின்றார்.

வாய்மையே வெல்லும் என்பார்!
பொய்மைக்கே வெற்றி
அடிக்கடி கிட்டும்,

வாய்மையும் வெல்லும்
எப்போதாவது!
வாய்மூடிப் பொறுத்திருங்கள்
அதுவரையிலும்.

எழுதியவர் : பூந்தளிர் (2-Oct-16, 3:48 pm)
சேர்த்தது : பூந்தளிர்
பார்வை : 196

சிறந்த கவிதைகள்

மேலே