அழகின் தலைப்பு அவள்

எழில் தேசத்தில் அவள் ராஜ்ஜியம் தான்

மூன்று எழுத்தில் சுருங்கிய அழகிற்கு விரிவாக்கம் தந்தவள்

அவள் அழகுக்கு உவமை தேட வைத்தவள்
அழகுக்கே உவமையாய் வந்தவள்

அழகியல் பாடத்தை அகிலத்திற்கு கற்பித்தவள்

அவள் அழகை வர்ணிக்கவே மொழிகள் யாவும் பிறந்தனவோ!

அழகயே மயக்கிய அழகின் அரசியே,
என் கவிதையின் அர்த்தத்தில் உன்னைக் காண்கிறேன்
என் கவிதையின் அர்த்தத்தை உன்னில் காண்கிறேன்.!

எழுதியவர் : ரேவதி (8-Oct-16, 10:19 pm)
சேர்த்தது : ரேவதி
பார்வை : 824

மேலே