இணைந்தால் தான் இன்பம் - லாவகமாயிருந்தால் தான் லாபம்

அழகாய் அன்பாய்
அருகில் இணைந்து இருந்தால்
குடும்பத்திற்கு லாபம்,

துருதுருவென கலகலவென
அரும்பாய் குறும்பாய் இருந்தால்
எல்லோருக்கும் லாபம்.

காட்டில் நிலவாய்
கடலில் மழையாய் இருந்தால்
யாருக்கு லாபம்?

பகையில் உறவாய்
பசிக்கு உணவாய் இருந்தால்
ஊருக்கு லாபம்.

எழுதியவர் : செல்வமணி (5-Nov-16, 7:51 am)
பார்வை : 127

மேலே