புது மழைப் பொன்னிலம்

புதுமழைப் பொழிவினில் பொன்னிலம் குளிர்ந்தது
புல்லுடன் நெல்லும் மகிழ்ந்தது பூமியில்
அறுவடைக்கால கனவுகள் நனவாகும் வேளாண்மையில்
உழுபவன் உள்ளமும் ஊரும் வாழுமே !

----நிலை மண்டில ஆசிரியப்பா

புதுமழை நற்பொழிவில் பொன்னிலம் பூத்திடும்
புல்லுடன் நெல்லும் மகிழும் நிலத்தில்
அறுவடைக் கால கனவு நனவாகும்
நல்லுழவு டன்ஊர்வா ழும்

---பல விகற்ப இன்னிசை வெண்பா

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Nov-16, 9:28 am)
பார்வை : 107

மேலே