தகைசால் தமிழ்

பழுத்த வார்த்தைகளில்
அழுத்தமாய் வரிகள் வார்த்து
திருத்தமாய் நெய்த்திருக்கிறது
நல்லதொரு நாலடியாராய்
ஆசி கொண்ட ஆத்திசூடியாய்
திருத்தம் செய்யும் திருக்குறளாய்
உள்ளம் வெளுக்கும் வெண்பாவாய்
அக விளக்காய் அகப்பாக்கள்
புற ஒழுக்கத்திற்காய் புறப்பாடல்கள்
முக்கனிச் சாராய்
முச்சங்கம் அமைத்த தமிழ்
முழுதும் படித்திட
முன்னேறும் மானுடம்...

எழுதியவர் : PRIYADHARSHINI (13-Nov-16, 12:25 pm)
பார்வை : 241

மேலே