​இழந்தக் காலங்கள்

வாழவுள்ளக் காலங்கள் வசந்தமோ வறட்சியோ
வரவவுள்ளக் ​காலங்கள் மகிழ்வோ வருத்தமோ
வாழ்ந்​திட்டக் காலத்தில் இழந்தக் காலங்களோ
வந்திடுமா​ மீண்டும்தான் நாமும் காண்போமோ !

​நிலவிய ​அமைதியும்​ கடந்துசென்ற வாழ்வையும்
உலவிய​ பொதுநல​மும் உன்னத தலைமுறையும்
வீசிய​ தென்றலாய் மகிழ்ந்த பொழுதுகளையும்
இழந்த​க் காலத்தின் மறையாத நினைவுகளே !

இணைந்து வாழ்ந்த குடும்பங்களால் இன்பமும்
​சமத்துவ நெஞ்சால் விளையாத சாதிவெறியும்
சுயநலக் கொள்கைகளை சுமந்திடா உள்ளமும்
நிகழ்கால வாழ்வில் காணாத ​நிலையன்றோ !

எழில்மிகு​ கிராமம் ஏற்றத்தாழ்விலா எண்ணம்
​கவர்ந்திடும் சுற்றுச்சூழல் மாசில்லாக் காற்று
தட்டுப்பாடில்லா​ குடிநீர் கட்டுப்பாடான சமூகம்
இழந்தக் காலத்தில் இருந்திட்ட சூழ்நிலையே !

சீர்மிகு நிர்வாகமும் சீரழியா கலாச்சாரமும்
மனிதம் நிறைந்த மாறுபட்ட சமுதாயமும்
நினைவில் நிற்கும் நினைவுச் சின்னங்கள் ​
கனவிலும்​ வந்திடா இழந்தக் காலங்கள் !​


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (9-Dec-16, 2:59 pm)
பார்வை : 284

மேலே