எதிர்பார்ப்பு

ஆவலைதூண்டி வியப்பில் ஆழ்த்தும் விந்தையே.. உன்னை கண்டிராமல் எவரும் இலர்..
உலகை படைத்த பிரம்மனிடம் நாங்கள் முறையிட வைக்கும் உள்ளுணர்வே..
உயிரில்லா காகிதத்தைத் தேடி நலிய செய்யும் நய வஞ்சகமே..
நாற்றுகள் நடும் என் உறவுகள் தங்களை இழந்து மாய்த்துக் கொள்வதும் நீ செய்த மமதையே..
போதும் நீ செய்யும் வெகுளித்தனம்...
காதலை தேடும் கண்களில் காவியம் படைக்க செய் விசுவாசமாய்..,
அலை கடல் தாண்டி செல்லும் என் அண்ணன்களை பிறர் பழி வாங்க செய்யும் வலையில் பிணைத்து விடாதே.., பொன்னாய் திருப்பிக்கொடு புன்னகைத்து கொள்ள..
கவலையோடு மருத்துவனை கைக்கூப்பும் கரங்களுக்கு கைம்மாறு செய்து விடு..
தன் பாவம் கரைக்க, தன்னை படைத்தவனைக் காண தலைத்தெறித்து ஓடும் பக்தனை தவிக்க வைக்காதே.,
பணம் துப்பும் எந்திரம்., பணம் புழங்கச் செய்யட்டும்., பரிதவிக்கும் நிலையின்றி..,
விண்ணீர் வந்து மண்ணைத்தொட்டு
பூத்து குலுங்கட்டும் புவி எங்கும்.. பூந்தோட்டாமாய்.
கலை நிறைந்தவனை கரைச்சேர்க்கும்
#எதிர்ப்பார்ப்பே..
இந்த கவிஞனுக்காக பலர் கட்டை விரல் பதிய செய்., பெருமிதம் கொள்கிறேன்.
இவண்
தாடியில்லா கேடி கவிஞன்
பா.சுரேந்தர்..

எழுதியவர் : தாடியில்லா கேடி கவிஞன் (23-Dec-16, 9:16 pm)
Tanglish : edhirpaarppu
பார்வை : 335

மேலே