சருகுகளின் சுயசரிதை

உலர்ந்த இலைகள்
சருகுகளாக மண்ணில் உதிர்ந்தன
நான் நடந்த போது
மலரோடும் செடியோடும் கொடியோடும்
இளம் தென்றலோடும் இளவேனில் பொழுதோடும்
தான் வாழ்ந்த வாழ்க்கையை
வலி மிகுந்த சருகோசையில் சொல்லிற்று !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jan-17, 8:50 am)
பார்வை : 346

மேலே