​தி​ரும்பிப் பார்க்கிறேன் ​​

திரும்பிப்​ பார்க்கிறேன்
கடந்து வந்தப் பாதையை
நடந்து முடிந்த நிகழ்வுகளை
கண்டு களித்தக் காட்சிகளை ​
துயரில்​ ஆழ்த்தியத் துன்பங்களை
கண்ணீர் வடித்திட்ட நேரங்களை ...

மனிதம்​ வாழ்ந்த காலத்தில்
மனிதனை மனிதன் மதித்தது ...
பெரியோரை வணங்கி என்றும்
அவர்தம் அறிவுரையை ஏற்றது ...
கூட்டுக்​ குடும்பமாய் வாழ்ந்து
இன்பத் துன்பங்களை பகிர்ந்தது ..

உறவை மதித்து உரையாடியது
நட்​புகளுடன் சுற்றித் திரிந்தது ..
இனமொழி​ உணர்வுடன் இருந்தது
வஞ்சமிலா இதயமுடன் வாழ்ந்தது ...
சேவைகள்​ புரிந்திட தேவைகளை துறந்த
அரசியலில் நல்லவர்கள் வாழ்ந்தது ...

அடுக்கிக்​ கூறிடலாம் நான் கண்டதை
அடியேன் திரும்பி​​​ப் பார்த்த வாழ்வை !
மாற்றங்கள்​ தவறில்லை இயற்கையே
​மாறியதால் அடைகிறோம் ஏமாற்றமே !
மாறித்தான் போனது மண்ணில் வாழ்வும்
மரித்திடும் நாளை எதிர்நோக்கி நாமும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (9-Jan-17, 3:48 pm)
பார்வை : 314

மேலே