சல்லிக்கட்டு போராட்டம்

ஒன்றே குலமென
ஒன்றி வாழும்
நாடு என
நகர் எங்கும்
கூவலிட்ட நாட்டிலே

காக்கை கூட்டம்போல்
கூடி வாழ்ந்த - எங்கள்
கூட்டுக்குள் பயங்கர
கயவர் போல்
கூட்டைக் களைக்க
வந்த ஆரியர்களே......... !

பாட்டன் முப்பாட்டன்
காலம் முதல்
பாரம்பரியத்ததை எங்கள்
நெஞ்சில் உரம்
போட்டு வளர்த்த
எறுழ்வலி மிக்க
ஏறு தழுவலை
எங்களிடம் இருந்து
பறிக்க நினைத்தவனே............!

சாணக்கியம் கொண்டு
சட்டங்கள் இயற்றி
சாசனம் இட்டாலும்
சாதூரியமாய் எங்களை
சிறைப் பிடித்தாலும்
சமுத்திரம் போல்
சங்கமமாகி இருக்கும் - நாங்கள்
சாதுயர் அடைந்தாலும்
சல்லிக்கட்டு நடப்பதை
சாத்தியம் ஆக்காமல்
சாய மாட்டோம்.............!

எழுதியவர் : புகழ்விழி (18-Jan-17, 12:23 pm)
சேர்த்தது : புகழ்விழி
பார்வை : 166

மேலே