நண்பனாய் இரு
நண்பா நீ தோளை கொடு
நான் தொடுவேன் விண்ணை முட்டி
அன்பாய் நீ ஆனபோதே
அதனை விட வேறு ஏது?
துன்பமென்றால் துணையாய் இருப்பாய்
துணைக்கு துணையாய் இன்பம் கொடுப்பாய்
வள்ளலோ உன் புன் சிரிப்பால்
வருத்தங்கள் இல்லாதொழிப்பாய்
கரம் நீ பற்றி நின்றால்
கவலைகள் தோன்றிவிடாது
திறம் கொண்ட நேர்மையினால்
தீயவையும் அண்டிவிடாது
அறம் பொருள் நீயெனக்கு
அகம் புறம் நீயெனக்கு
இகம் யுகம் கடந்த பின்னும்
என்னோடு நீயிருந்தால்
வரமேது வேண்டுமென்று
வாராது மற்று ஒன்றே