இளைஞர் எழுச்சி
இன்றைய நவீன காலக்கட்டத்தில் பல விளையாட்டுகளும் விளையாட்டுக் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்றைய சிறுவர்களும் இளைஞர்களும் இந்த விளையாட்டுக்களே தங்களுக்கு உற்சாகம் அளிப்பதாகவும் பொழுதுபோக்காக அமைந்திருப்பதாகவும் எண்ணியிருந்தனர்.பல பெற்றோர்களின் எண்ண ஓட்டமும் அதுவாக தான் இருந்தது.அப்படிப் பட்ட சூழலில் இன்று மத்திய அரசு அறிவித்த ஒரு சட்டத்தால் இன்றைய நவீன இளைஞர்களுக்கும் பாரம்பரியத்தின் மீது உணர்வும் அக்கரையும் இருக்கிறது என்று எடுத்துக்காட்டியுள்ளது இந்த சல்லிக்கட்டுக்கான போராட்டம்.
பொதுவாக ஜனநாயகம் என்பது மக்கள் மக்களுக்காக ஆட்சி நடத்துவதே.இது இந்திய குடிமகனாகிய ஒவ்வொருவருக்கும் தெரிந்த ஒன்றே.ஜனநாயகம் சட்டம் இயற்றப்பட்ட 1950 ஆம் ஆண்டு முதல் மக்கள் விருப்பத்துடனும் ஒருங்கினைப்புடனுமே ஆட்சி நடைப்பெற்று வந்துக் கொண்டிருந்தது.ஆனால் இன்றோ தானதிகார ஆட்சிப் போல் நடைப்பெற்று வருகிறது.உயர்மதிப்பு பண ஒழிப்பு முதல் சல்லிக்லட்டு வரை தானதிகாரம் தான் நடந்து வருகிறது.
மத்திய அரசு அமல்படுத்திய பல சட்டங்களுக்கும் தலையசைத்து ஒப்புக்கொண்ட மாநில அரசு,இன்று ஒரு மாநிலத்துக்கென ஒரு இனத்துக்கென உள்ள பாரம்பரியத்தை முடக்க சட்டங்கள் அமல்படுத்தினால் இதற்கும் தலையசைத்து ஒப்புக்கொள்வார்கள் என நினைத்தார்கள் போலும்.தாங்கள் போட்டக் கணக்கு தப்புக் கணக்கு என உணர வைக்கவே களம் இறங்கியுள்ளோம்
வாழ்க்கைக்கு மிகவும் தேவையான எங்கள் படிப்பையும் துச்சமாக எண்ணி களம் இறங்கியுள்ளோம் எங்கள் பாரம்பரியத்தை காப்பதற்காக.நவீன கால இளைஞர்கள் என்றால் தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டும் கிரிக்கெட் பார்த்துக் கொண்டும் சமூக வலைதளங்களில் பொழுதை வீணாக்கிக் கொண்டும் இருப்பார்கள் என்று எண்ணினார்கள் போலும்.நகரத்திலே வாழ்ந்தாலும் நாங்கள் அனைவரும் ஒரு காலத்தில் கிராமத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் தான்.எங்களுக்குள்ளும் கிராமிய உணர்வும் பாரம்பரிய உணர்வும் இன்னும் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது என்பதை இன்றைய போராட்டத் திறள் மூலம் உணரலாம்.
எங்கள் முன்னோடிகள் கற்றுத் தந்த பாடம் வாயிலாக அறவழியில் எங்கள் உரிமையை பெற திரண்டுள்ள திரள்தான் இது.இளைஞர்கள் ஒன்றினைந்து செயல்படும் இந்த உரிமை போராட்டம் எங்களது உரிமையை எங்களுக்கு மீண்டும் மத்திய அரசு தானே முன்வந்து தரும் வரை ஓயாது.
எத்தனை நாட்கள் கடந்தாலும் சல்லிக்கட்டு நடைப்பெரும் வரை போராடுவோம்........