முட்கள் தைத்தன
உனை நீராய் நினைத்தேன்
பருகிட துடித்தேன்
நிலவாய் நினைத்தேன்
நெருங்கிட விரைந்தேன்
பூவாய் நினைத்து கவர்ந்திட முயன்றேன்!
பாவி பின்பே அறிந்தேன்
நீரின் ஆழமும்,வானின் உயரமும்
விரல்களின் வீக்கமும்
முட்கள் தைத்ததால்.....

