மனப்பாடப்படிப்பு

*மனப்பாடப் படிப்பு*📖
**************************

ஒரு கிராமத்துல படிச்சபையன்
வெளியூருக்கு வேலைக்குப் போறான்...

தனியா தனக்கென்று ஒரு
ரூம் எடுத்து அதுல தங்குறான்...

நல்ல வேலை...
நல்ல சம்பளம்...

அதே கிராமத்தை சேர்ந்த
அவனுடைய நண்பன்....
அந்த ரூமுல தங்கி வேலை தேட வாரான்...
அவனுக்கு படிப்பு கொஞ்சம் கம்மிதான்...

என்னதான் ரெண்டுபேரும்
ஒரே ரூமுல தங்கியிருந்தாலும்...

குடிக்கிற தண்ணீல இருந்து...
சாப்புடுற சாப்பாடு வரைக்கும்
தனித்தனி தான்...

படிச்சவன் கையில அதிக பணம் இருக்கு...
படிக்காதவன் கையில கொஞ்சமாத்தான் இருக்கு...

ரெண்டு பேரும் ஓட்டலுக்கு போனா
படிச்சவன் டீசண்ட்டா
பாட்டல் தண்ணீர் வாங்கிக் குடிப்பான்...

கேட்டா
இதுதான் கவுரவம்னு சொல்லுவான்....

படிக்காதவன் சாதாரண தண்ணீர குடிப்பான்...
கேட்டா கையில காசு இல்லைன்னு சொல்லுவான்...

ரூமுலையும் இதே போல் தான்...
படிச்சவனுக்கு கேன் தண்ணி...
படிக்காதவனுக்கு சாதாரண தண்ணி...

ஒருநாள் இருவரும் திருவிழான்னு
சொந்த ஊருக்கு போறாங்க...
திரும்பி வர ஒரு வாரம் ஆகுது...

வந்து பார்த்தா
கேன் தண்ணீர்
அப்படியே பளபளன்னு சுத்தமா இருக்கு....
சாதாரண தண்ணீர்ல
பாசி படிஞ்சி, புழுக்கள் வந்துருச்சி...

அப்ப படிச்சவன் சொல்றான்...
"பார்த்தியா எப்படி பளபளன்னு இருக்கு...
இதுக்குத்தான் காசு செலவழிச்சாலும் பரவால்லேன்னு
கேன் தண்ணீர் குடிக்கணும்னு சொல்றது..."

இதைக்கேட்ட படிக்காவனுக்கு
என்ன சொல்லனும்னு தெரியால...!

ஒருவேளை அவனும் படிச்சிருந்தா சொல்லியிருப்பான்...

"நா குடிக்கிற தண்ணியில உயிர் வாழுற
சத்து இருக்கு...
அதனாலதான் புழு வந்துருக்கு...

நீ குடிக்கிற தண்ணீல ஒன்னும் இல்ல...!
அதான் ஒன்னும் வரலைன்னு...!!"

இதுல ஒரு சின்ன முரண்பாடு என்னன்னா...?
இவனும் நல்லா படிச்சி இருந்தா...!
கவுரவுத்துக்காக கேன் தண்ணீர
குடிச்சாலும் குடிச்சிருப்பான்...!!

கவுரவத்துக்காக மனப்பாடம் பண்ணி
பேருக்கு பக்கத்துல பல டிகிரிய போடும்
நம்ம ஊர்ல
செயல் முறை விளக்கத்துக்கு இடம் ஏது...?

எல்லோரும் படிக்காங்க... !
அதான் நாங்களும் படிக்கோம்....!!
மனப்பாடம் பண்ணி...!!!

இவண்
✒க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (4-Feb-17, 2:28 pm)
பார்வை : 82

மேலே