அழகு

அரிதாரம் நிறைந்து இருப்பது
அழகல்ல
அர்த்தங்களோடு நிறைந்து இருப்பது
அழகு...............................................!
கவர்ச்சி யாக இருப்பது
அழகல்ல.......................................!
நல்ல கற்போடு இருப்பது
நல்ல அழகு .............................!
அதிலும் நல்ல கற்றல் அறிவோடு
இருப்பது அதனினும் அழகு ..........................!
அதிலும் பெண்ணாய் இருப்பது
பேரழகு.......................................... !
அதனினும் மண்ணையும்
மரபையும்
மக்களையும் காக்கும்
பெண்ணாய் இருப்பது
பெயர் பெரும் பார் வியக்கும்
பேரழகு ................................................................!