என் நெஞ்சை தாலாட்டும் பாடல்

என் நெஞ்சை தாலாட்டும் பாடல்

என் நெஞ்சை தாலாட்டும் பாடல்
என் பாடல் உன் தேடல்
என் தேடல் உன் காதல்
என்காதில் பூபாளங்கள் ஹா..ஹா..
என் நெஞ்சை தாலாட்டும் பாடல்
என் பாடல் உன் தேடல்

இதழ்களில் ஊறும் தேனை
நாளும் சுவைக்கும் வண்டாக
என்னிதய சோலை தன்னில்
பூத்திருக்கும் மலர் செண்டாக
இதழ்களில் ஊறும் தேனை
நாளும் சுவைக்கும் வண்டாக
என்னிதய சோலை தன்னில்
பூத்திருக்கும் மலர் செண்டாக
கண்களால் கைது செய்து (ஓ)
இதயத்தில் சிறையும் வைப்பாய்(ஓ)
கண்களால் கைது செய்து (ஓ)
இதயத்தில் சிறையும் வைப்பாய்(ஓ)
மலரம்பு தைத்தானே மன்மதன்

என் நெஞ்சை தாலாட்டும் பாடல்
என் பாடல் உன் தேடல்
என் தேடல் உன் காதல்

உதயத்து காலை பொழுதில்
காதை தழுவும் பூபாளம்
இதயத்து வீணை மீட்டும்
ஸ்வரங்கள் யாவும் தெய்வீகம்
உதயத்து காலை பொழுதில்
காதை தழுவும் பூபாளம்
இதயத்து வீணை மீட்டும்
ஸ்வரங்கள் யாவும் தெய்வீகம்
உனைஎன் கண்களில் வைத்து (ஆ)
இறுதிவரை நெஞ்சில் காப்பேன்(ஆ)
உன் வாழ்வின் வேராவேன் நான்

என் நெஞ்சை தாலாட்டும் பாடல்
என் பாடல் உன் தேடல்
என் தேடல் உன் காதல்
என்காதில் பூபாளங்கள் ஹா..ஹா..
என் நெஞ்சை தாலாட்டும் பாடல்
என் பாடல் உன் தேடல்
(ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பாட்டின் பாதிப்பு )

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (12-Oct-25, 5:11 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 7

மேலே