முப்பால்

ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
அன்பால்
பண்பால்
இணைத்தோம்
மனத்தால்.
முப்பால்
ஓர்பால்
திளைத்தோம்.
அப்பால்
பெண்பால்
பெருத்தல்
தவித்தாள்
துடித்தாள்
அழுதாள்
மகிழ்ந்தாள்.
முலைப்பால்
அருந்த
மழலை
ஈன்றாள்.
இப்பால்
பலர்பால்
மகிழ்வாள்
ஆவின் பால்
இனிப்பால்
தொடருது
கவிப்பால்.