சலாவு55கவிதைகள்

என்னவளும் ஏந்திழையே ..
காண ஏங்குகிறேன் காணலையே ..
கனவினிலே வந்தவளே ..
காதல் கதை பல சொன்னவளே ..
.
பூக்களிலும் தேன்களிலும் ..
இல்லாத இனிமையடி ..
என்னவளே நீ என்னை ..
பார்க்கும் அந்த நொடி ..
மெல்லினமே இடையினமே ..
நீ பார்த்துவிட்ட மறுநொடியே ..
மொழி பெயர்ப்பேன் என் கவிதைகளை ..
உண்மை எனும் மெய் காதலாக ..
.
என்னவளும் ஏந்திழையே ..
காண ஏங்குகிறேன் காணலையே ..
.
ஒரு முறையோ பல முறையோ ..
ஈரேழு ஜென்மங்களோ ..
இணைபிரியாமல் என்னுடனே ..
நீ வேண்டும் என் அன்பே ..
மலர்களும் தான் மடிந்ததுவே ..
மான் விழியே உனைக்கண்டு ..
பேரு பெற்ற பேரழகே ...
நீ பல கோடிகளில் ஒருத்தியடி .
.
என்னவளும் ஏந்திழையே ..
காண ஏங்குகிறேன் காணலையே ..
.
உன்னை போன்ற ஓர் அழகு..
உலகத்திலே இல்லையடி ..
ஏற்றுகொள் என்னையடி ..
உனை காதலிக்கும் கள்வனடி
எங்கு சென்று தேடிடுவேன் ..
உனைபோன்ற பேரழகை ..
எனக்கு மட்டும்சொந்தமென்று ..
ஒரு வார்த்தை சொல்லிவிடு ..
.
என்னவளும் ஏந்திழையே ..
காண ஏங்குகிறேன் காணலையே ..
கனவினிலே வந்தவளே ..
காதல் கதை பல சொன்னவளே ..

எழுதியவர் : சலாவுதீன் (12-Mar-17, 8:52 pm)
பார்வை : 53

மேலே