தொழிலையே விட்டுட்டேன்

சோமு:- வீடுகளில் கொள்ளை அடிச்சுக்கிட்டு இருந்த நீ இப்ப வீடுகளில் வெள்ளை அடிக்க ஆரம்பிச்சிட்டியாமே..., ஏன்?

ராமு:- போலீஸ்காரங்க தொந்தரவு காரணமா திருட்டு தொழிலையே விட்டுட்டேன்!

சோமு:- போலீஸ் அவங்க கடமையை செய்ய வேண்டாமா!

ராமு;- அதுக்காக, உடம்புக்கு முடியாம இருக்கறப்பவும், ஒரு நல்லது கெட்டது, விஷேசம் நடக்கறப்பவும் தொழிலுக்கு போகாத நாட்களிலும் கூட, கண்டிப்பா "மாமூல்" கொடுத்தாகணுமுன்னு கன்டிஷன் போட்டா எப்படி? வெல்லம் சாப்பிடறது ஒருத்தன், விரல் சூப்பறது இன்னொருத்தன்னு நினைக்கறப்போ நெஞ்சே வெடிச்சிடிச்சு, அதான் திருட்டு தொழிலையே விட்டுட்டேன்!

சோமு:-?🔫?🔪?🔫?🔪?🔫?🔪?🔫?🔪?

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (18-Mar-17, 10:15 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 737

மேலே